சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள்
இலங்கை கடற்றொழில் படகு ஒன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுளளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பலநாள் மீன் படகில் பயணித்த ஆறு இலங்கையர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறை பிடித்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 12ம் திகதி சிலாபம் திக்ஓவிட்ட துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற படகே இவ்வாறு சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்றொழில் படகு
இதற்கமைய ஆபிரிக்க கடற்பரப்பில் வைத்து இந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், லொரோன்சோ புதா 4 என்ற பல நாள் கடற்றொழில் படகில் பயணம் செய்த ஆறு இலங்கையர்களும், படகும் கடற்கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        