இலங்கையிலிருந்து மிகவும் நுட்பமான முறையில் தங்கம் கடத்திய பெண் கைது! (Photo)
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சுங்கத்துறையின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த குறித்த பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காலணியின் அடியில் நுட்பமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 தங்க துண்டுகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 393 கிராம் தங்கம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு இந்திய ரூபாய் 18.84 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam
