அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரித்த மொட்டுக் கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய வேட்பு மனுக் கோரும் அரசாங்கத்தின் தீர்மானத்தை மொட்டுக் கட்சி ஆதரித்துள்ளது.
இது தொடர்பில் மொட்டுக் கட்சி எனப்படும் பொதுஜன பெரமுண கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளதாவது,
இடைநிறுத்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்குப் புதிய வேட்புமனுக்கள் கோரும் அரசாங்கத்தின் தீர்மானம் வரவேற்கத்தக்கது.
நிபந்தனை
அதனை நாங்கள் ஆதரிக்கின்றோம். எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் மொட்டுக் கட்சி அதன் சொந்த சின்னத்திலேயே போட்டியிடும். எங்களது சின்னத்தை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாரில்லை.
எங்களுடன் இணையும் ஏனைய கட்சிகளும் மொட்டுக் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதே எங்கள் நிபந்தனையாக இருக்கும்.
எதிர்வரும் காலங்களில் கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளோம் என்றும் நாமல் ராஜபக்ச எம்.பி. தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
