மன்னாரில் இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை

Mannar Crime
By Ashik Mar 08, 2026 09:17 AM GMT
Report

மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகள் தமது விருப்பப்படி பயணிக்க முழுமையான உரிமை உண்டு என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பில் அதிகார சபையின் தலையீட்டுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இராஜதந்திர சூறாவளிக்கு மத்தியில் நிதானமாகச் செயற்பட்ட ஜனாதிபதி - அஸ்கிரிய பீடம் பாராட்டு

இராஜதந்திர சூறாவளிக்கு மத்தியில் நிதானமாகச் செயற்பட்ட ஜனாதிபதி - அஸ்கிரிய பீடம் பாராட்டு

முறைப்பாடு

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பில் இருந்து தனியார் பேருந்தில் பயணித்து மன்னாரை வந்தடைந்த இரு பெண்கள், அதிகாலையில் தலைமன்னார் நோக்கிச் செல்வதற்காக அங்கிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான (இ.போ.ச.) பேருந்தில் ஏற முற்பட்டுள்ளனர்.

எனினும், அவர்கள் முன்னர் தனியார் பேருந்தில் பயணித்து வந்ததைக் காரணம் காட்டி, காப்பாளர் பெண்கள் இருவரையும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தில் ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை | Sl Transport Board Guard Sentenced In Mannar

பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்தச் சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

இவ்விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எமது அதிகார சபையால் இலங்கை போக்குவரத்துச் சபையின் (வடக்கு) மன்னார் சாலை முகாமையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

இந்த ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் தாம் விரும்பும் போக்குவரத்து சேவையை தெரிவுசெய்து பயணம் செய்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.

அதிலும் குறிப்பாக, அதிகாலை வேளைகளில் தொழில் நிமித்தமாக பயணம் செய்யும் பெண்கள் பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பாகவும் கௌரவத்துடனும் பயணிப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அனைவரதும் கடமையாகும்.

மட்டக்களப்பில் டீசலில் ஓடும் மண்ணெண்ணெய் வாகனங்கள்! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

மட்டக்களப்பில் டீசலில் ஓடும் மண்ணெண்ணெய் வாகனங்கள்! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

கடும் எச்சரிக்கை

எமது பணிப்புரைக்கமைவாக, உரிய விசாரணைகளை உடனடியாக மேற்கொண்ட மன்னார் சாலை முகாமையாளர், குறித்த இ.போ.ச. காப்பாளருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அவருக்கு ஒரு நாள் வேதனத்தை தண்டப்பணமாகவும் அறவிட்டுள்ளார் என்ற தகவல் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபையின் மன்னார் சாலை அதிகாரிகளுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மன்னாரில் இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை | Sl Transport Board Guard Sentenced In Mannar

இனிவரும் காலங்களிலும் பயணிகளிடம், குறிப்பாக பெண்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ளும் அல்லது போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில் பொதுமக்கள் எமது அதிகார சபைக்கு தயக்கமின்றி முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

அதற்காக விசேடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 0719090900 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் ஊடாகத் தகுந்த ஆதாரங்களுடன் உங்களின் முறைப்பாடுகளை அனுப்பி வைக்கலாம்.

பொதுமக்களின் முறையான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த அதிகார சபை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றும், என்று அதிகார சபையின் தலைவர் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பதவி நீக்கம் தொடர்பான மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பதவி நீக்கம் தொடர்பான மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US