ரணில் - சஜித் தரப்பு இணைந்து செயற்பட வேண்டும்! மயந்த திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதே பொருத்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறிச் செல்லும் எவ்வித எண்ணங்களும் கிடையாது.
புரிந்துணர்வு உடன்படிக்கை

இரண்டு கட்சிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் ஊடாக இணைந்து செயற்படுவதே உசிதமானது என்பது எமது நிலைப்பாடு.
இரண்டு கட்சிகளினதும் கொள்கைகள் ஒன்று என்பதனால், அதன் நலன்கள் வேறும் தரப்பிற்கு செல்லக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடும்போக்குவாத சக்திகளுக்கு மறைமுகமாகவேனும் ஆதரவு வழங்குவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மயந்த திஸாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் சக்தி போடும் ரொமான்டிக் பிளான், ஆனால்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam