ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் விசேட கலந்துரையாடல் (VIDEO)

Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Economic Crisis Samagi Jana Balawegaya Harsha de Silva
By Dhayani Aug 05, 2022 07:35 PM GMT
Report

"எதிர்காலத்தில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரசை சர்வகட்சி அரசு என்று பெயரிடுவதற்கு உடன்படவில்லை என்றால், சர்வகட்சி ஆட்சி என்று பெயரிட நான் முன்மொழிகின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

“சர்வகட்சி அரசில் இணையுமாறு அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் அழைத்துள்ளோம். அதற்காக அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம். நாட்டின் பொருளாதாரம் தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் விசேட கலந்துரையாடல் (VIDEO) | Sjb Meets President Ranil

இந்தநிலையில் இருந்து மீள அனைவரும் இணைந்து அரசின் அமைச்சுப் பதவிகளை ஏற்று சர்வகட்சி அரசை உருவாக்கி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் ஐக்கிய மக்கள் சக்திக்கு சர்வகட்சி அரசில் எங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைக்கின்றேன். இவர்கள் அனைவரும் என்னுடன் பணியாற்றியவர்கள்.

எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் ஒன்றாக வேலை செய்ய முடியும். 1941 ஆம் ஆண்டு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்துக்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டது. முழு நாடாளுமன்றமும் அரசாக ஆக்கப்பட்டது. அதே மரபை நாமும் செயற்படுத்தலாம்.

ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் விசேட கலந்துரையாடல் (VIDEO) | Sjb Meets President Ranil

1977 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தில் 5/6 அதிகாரம் பெற்று அரசு அமைக்கப்பட்டு நாடு கட்டியெழுப்பப்பட்டது. ஆனால், இப்போது 5/6 அதிகாரத்தாலும் சர்வகட்சி அரசு இல்லாமல் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

ஒரே வழி சர்வகட்சி ஆட்சி மாத்திரமே ஆகும். சமீபத்திய வன்முறைச் செயல்கள் காரணமாக, நாங்கள் அவசரகால உத்தரவை விதிக்க வேண்டியிருந்தது. ஆனால், அவசரகால உத்தரவைத் தொடர்வதற்கு நான் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், எதிர்கால பொருளாதார வேலைத்திட்டத்தின்போது சில சட்டங்கள் விதிக்கப்பட வேண்டும். அதற்கு அவசரகாலச் சட்டம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் - ராகேஸ் 

இரண்டாம் இணைப்பு

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தாம் தயாராக இல்லை என்றும், சர்வகட்சி நிர்வாகத்தில் நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற கண்காணிப்பு குழுக்களுக்கு அதிகாரம் மிக்க தலைமைத்துவத்தினை வகிக்க தயார் என்று ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளது.

மேலும்,நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கமல்ல. சர்வகட்சி நிர்வாகமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமெனவும், சர்வகட்சி நிர்வாகத்தின் கீழ் நாடாளுமன்ற கண்காணிப்பு குழுக்களை நியமித்து அதன் ஊடாக நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.


இந்நிலையில், ஜனாதிபதிக்கும்,சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளது.

இதன்போது சர்வகட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா டுவிட்டர் பதிவொன்றினையிட்டு தெரிவித்துள்ளார்.


இதன்போது அவசரகாலச் சட்டத்தை நீக்கி, ‘அரகலயா’ போராட்டக்காரர்களை விடுவித்து, அதே நேரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை மிரட்டுவதையும்,தன்னிச்சையாக கைது செய்வதையும் நிறுத்துமாறும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதமதாச , ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US