நாட்டின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் அடுத்துவரும் 6 மாதங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்காத மிகவும் கடினமான காலப்பகுதியாக இருக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியதத்துடன் தேவையான ஒப்பந்தங்களை செய்து இணக்கப்பாடுகளை எட்டிப் பயணிப்பதை தவிர மாற்று வழிகள் இருப்பதாக நான் கருதவில்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும், அடுத்து வரும் 6
மாதங்கள் கடினமானவை. அதனைக் கடந்தே ஆகவேண்டியுள்ளது. கடக்க முடியாது என்று
திரும்பி வர முடியாத நிலைமையே காணப்படுகின்றது" என கூறியுள்ளார்.
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 1 மணி நேரம் முன்
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam