மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜா வழக்கு தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது, இன்று (27.05.2025) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மரியராஜ் சிந்துஜா என்பவர், கடந்த வருடம், 28.07.2024 அன்று வைத்தியசாலையில் இரத்தபோக்கு காரணமாக உயிரிழந்தார்.
வழக்கு விசாரணை
இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் தொடரப்பட்ட இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையில், மன்னார் பொலிஸாரினால் வைத்தியசாலையில் சம்பவம் நிகழ்ந்த போது கடமையில் இருந்த சந்தேக நபர்களை எதிர்வரும் 17.06.2025 அன்று முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் 17.06.2025 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
