ஜா-எல பகுதியில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் தீவிர விசாரணை
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பட்டுவத்த சாமர என்பவரின் மனைவிக்குச் சொந்தமான வீட்டுக்கு அடையாளம் நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஜா - எல, புனித அன்னாள் வீதியில் அமைந்துள்ள இந்த வீட்டுக்கு இன்று(07.03.2026) அதிகாலை 1.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இந்த தாக்குதலுக்கு ரி - 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த வீடு தற்போது வேறொரு தரப்பினருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஜா - எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.