40 கோடி நிதி மோசடி: சாணக்கியன் எடுத்த அதிரடி நடவடிக்கை
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறைகேடாக நிதி பெறப்பட்டுள்ளத என்றால் அந்த நிதியை மீளப்பெற வேண்டும். மதுபானசாலைகளுக்கு சட்டவிரோதமாக அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அந்த அனுமதி பத்திரங்களை இரத்து செய்ய வேண்டும் என இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "அரசியல்வாதிகளுக்கு மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. வழங்கப்பட்ட பட்டியலையும் வாசித்தார்கள், அதற்குப் பிறகு எந்த நடவடிக்கையையும் காணவில்லை.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து அரசியல்வாதிகள் பணம் பெற்றதாக ஒரு பட்டியல் வாசிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஒன்றும் நடைபெறவில்லை, பட்டியல்களை அனைவரும் வெளியிடலாம் ஆனால் அவர்களிடம் இருக்கின்ற பணத்தினை மீளப் பெறவேண்டும்.
மக்களுடைய பணத்தை முறைகேடாக நட்டஈடாக எடுத்து இருக்கின்றார்கள் என்றால் அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் பட்டியல்களை வெளியிட்டால் மாத்திரம் போதாது. நிதியைப் பெற்றவர்களிடம் இருந்து மீள அந்த நிதியை பெறவேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)