நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka S. Sritharan Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Jun 21, 2022 02:18 PM GMT
Report

“தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசு தமிழ் இளைஞர்களுக்கு எதிராக இராணுவம் மூலம் தாக்குதல்களை மேற்கொள்கின்றது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவரான மனநலம் குன்றிய பொதுமகன் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் முரண்பட்டுள்ளார்.

இதன்போது, அங்கு வருகைதந்த விசுவமடு 572 ஆம் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் குறித்த பொதுமகனை தமது முகாமுக்கு இழுத்து சென்று பலமாக தாக்கி இரத்தக்காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

இதனை அவதானித்த அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இராணுவ காவலரணுக்கு அருகே சென்று குறித்த பொதுமகனை தாக்கியமைக்கான காரணத்தை கேட்டபோது இராணுவத்தினர் அவர்களையும் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.

அதன்பின்னர் இரு கனரக வாகனங்களில் பொல்லுகளோடும் கூரிய ஆயுதங்களோடும் அழைத்துவரப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் இந்த சம்பவத்தோடு எவ்வித தொடர்புமற்ற வீதியால் சென்றவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

இதில் 6 பேர் இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

அன்றாட சீவியத்துக்காக, விவசாயத்துக்காக நாள் முழுதும் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் மீது காரணமின்றி இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளமை அப்பகுதி மக்களிடையில் பாரிய அதிருப்தியையையும் அதியுச்ச கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக பிரமானந்தமாறு பிரதான வீதியின் மூன்று இடங்களிலும், விசுவமடு சந்நிதியிலும் சமபவம் இடம்பெற்ற இராணுவ காவலரண் முகாமுக்கு அருகிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

எனவே, சமூக வன்முறைகளுக்கு வழிகோலும் வகையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சமப்வத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும், பொதுப் பயன்பாட்டு இடங்களில் இராணுவ தலையீடுகளை தவிர்ப்பதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆவணம் செய்யுமாறு இந்த உயர்ந்த சபையினூடாக ஜனாதிபதியையும் சமபந்தப்பட்ட அமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

காலிமுகத்திடல் போராட்டம் 

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

இந்த நாட்டிலே காலிமுகத்திடலிலும் ஒரு போராட்டம் நடக்கின்றது. தென்பகுதியிலுள்ள சிங்கள இளைஞர்கள் போராட்டங்கள் நடத்துகின்றார்கள். பொலிஸாரின் காவலரண்களைத் தள்ளுகின்றார்கள். இராணுவத்தினரைத் தள்ளுகின்றார்கள்.

இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும்,முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை உங்களது பிள்ளைகளாக பார்க்கின்றீர்கள். தமிழர்களை மாற்று முகமாக பார்க்கின்றீர்கள்.

நாடு முழுவதும் மக்கள் எரிபொருளுக்காக தெருக்களில் காத்திருக்கின்றார்கள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் வரையில் வீதிகள் எல்லாம் திருவிழாக்கள் போல் 3, 4 நாட்களாக எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கின்றார்கள்" என கூறியுள்ளார்.

தமிழர்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர் சரத் வீரசேகரவே! நாடாளுமன்றத்தில் சிறீதரன் சீற்றம் 

எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு


நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US