நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு

Parliament of Sri Lanka S. Sritharan Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Jun 21, 2022 02:18 PM GMT
Report

“தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசு தமிழ் இளைஞர்களுக்கு எதிராக இராணுவம் மூலம் தாக்குதல்களை மேற்கொள்கின்றது” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட எம்.பி சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குற்றவியல் நடவடிக்கை கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "கடந்த 18ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இரவு 7.30 மணியளவில் வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவரான மனநலம் குன்றிய பொதுமகன் ஒருவர் அங்கிருந்தவர்களிடம் முரண்பட்டுள்ளார்.

இதன்போது, அங்கு வருகைதந்த விசுவமடு 572 ஆம் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் குறித்த பொதுமகனை தமது முகாமுக்கு இழுத்து சென்று பலமாக தாக்கி இரத்தக்காயங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

இதனை அவதானித்த அதே பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் இராணுவ காவலரணுக்கு அருகே சென்று குறித்த பொதுமகனை தாக்கியமைக்கான காரணத்தை கேட்டபோது இராணுவத்தினர் அவர்களையும் அச்சுறுத்தி வெளியேற்றியுள்ளனர்.

அதன்பின்னர் இரு கனரக வாகனங்களில் பொல்லுகளோடும் கூரிய ஆயுதங்களோடும் அழைத்துவரப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் மற்றும் இந்த சம்பவத்தோடு எவ்வித தொடர்புமற்ற வீதியால் சென்றவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

இதில் 6 பேர் இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

அன்றாட சீவியத்துக்காக, விவசாயத்துக்காக நாள் முழுதும் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் மீது காரணமின்றி இராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளமை அப்பகுதி மக்களிடையில் பாரிய அதிருப்தியையையும் அதியுச்ச கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக பிரமானந்தமாறு பிரதான வீதியின் மூன்று இடங்களிலும், விசுவமடு சந்நிதியிலும் சமபவம் இடம்பெற்ற இராணுவ காவலரண் முகாமுக்கு அருகிலும் அதிகளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் வகையிலான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

எனவே, சமூக வன்முறைகளுக்கு வழிகோலும் வகையிலும் மனிதாபிமானமற்ற முறையிலும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சமப்வத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும், பொதுப் பயன்பாட்டு இடங்களில் இராணுவ தலையீடுகளை தவிர்ப்பதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆவணம் செய்யுமாறு இந்த உயர்ந்த சபையினூடாக ஜனாதிபதியையும் சமபந்தப்பட்ட அமைச்சரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

காலிமுகத்திடல் போராட்டம் 

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

இந்த நாட்டிலே காலிமுகத்திடலிலும் ஒரு போராட்டம் நடக்கின்றது. தென்பகுதியிலுள்ள சிங்கள இளைஞர்கள் போராட்டங்கள் நடத்துகின்றார்கள். பொலிஸாரின் காவலரண்களைத் தள்ளுகின்றார்கள். இராணுவத்தினரைத் தள்ளுகின்றார்கள்.

இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும்,முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

நாட்டில் ஒவ்வொரு இனங்களுக்கும் தனித்தனி சட்டங்கள்: சிறிதரன் குற்றச்சாட்டு | Separate Laws Species In The Country Minor Charge

தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை உங்களது பிள்ளைகளாக பார்க்கின்றீர்கள். தமிழர்களை மாற்று முகமாக பார்க்கின்றீர்கள்.

நாடு முழுவதும் மக்கள் எரிபொருளுக்காக தெருக்களில் காத்திருக்கின்றார்கள். நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரும் வரையில் வீதிகள் எல்லாம் திருவிழாக்கள் போல் 3, 4 நாட்களாக எரிபொருளுக்காக மக்கள் காத்திருக்கின்றார்கள்" என கூறியுள்ளார்.

தமிழர்களின் கொலைகளுக்கு பொறுப்பானவர் சரத் வீரசேகரவே! நாடாளுமன்றத்தில் சிறீதரன் சீற்றம் 

எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு


மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
நன்றி நவிலல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US