எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முரண்பாடு
விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள இராணுவ காவல் அரணில் இருந்த இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடொன்று எற்பட்டுள்ளது.
இதன் காரணமாக விசுவமடு எரிபொருள் நிலையத்தில் 18 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நஷ்டயீடு
இதன்போது பொதுமக்கள் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசியுள்ளதாகவும் இதனையடுத்து இராணுவத்தினர் மேல் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இராணுவத்தினால் பாதிக்கப்பட்ட தமது குடும்பங்களுக்கு நஷ்டயீட்டினை பெற்றுத்தர வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் தமது முறைப்பாட்டை மக்கள் பதிவு செய்யவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri