சாட்டை துரைமுருகன் வீட்டில் சோதனை: கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் தொடர்பான புத்தகங்கள்
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான புத்தகமொன்று எடுத்து செல்லப்பட்டுள்ளது.
திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள அவரின் இல்லத்திலேயே இன்று (02.02.2024) காலை இந்த தீவிர சோதனை நடந்துள்ளது.
சோதனை நடைபெற்ற நேரத்தில் சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாததால் அவரது மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
மறு விசாரணை அழைப்பாணை
தொடர்ந்து, அவரது வீட்டில் இருந்து நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற புத்தகமும் 'திருப்பி அடிப்பேன்' என்ற சீமான் எழுதிய புத்தகமும் எடுத்துச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், சாட்டை துரைமுருகனின் மனைவியிடம் மறு விசாரணை அழைப்பாணையும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 12 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
