இலங்கையிலிருந்து வருவோருக்கு தடைவிதித்துள்ள சவுதி
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்து சவுதி அரேபியாவுக்கு வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன் சவுதி அரேபியப் பிரஜைகள் இந்த நாடுகளுக்குப் பயணம் செய்வதையும் அந்நாடு தடைசெய்துள்ளது.
எனினும் சவுதி அரேபியப் பிரஜைகள் மற்றும் மத குருமார் 72 மணி நேரத்திற்குள் நாட்டுக்குள் வர முடியும் எனவும், இதன் பின்னர் எந்த பயணிகளும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தியா மற்றும் பிலிபைன்ஸை சேர்ந்த சுகாதாரப் பிரிவினருக்கு இந்தத் தடை அமுலாகாது என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri