திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்: சாணக்கியனை எச்சரித்த சரத் வீரசேகர

Sarath Weerasekara Shanakiyan Rasamanickam Eastern Province
By Kamal Oct 20, 2023 12:58 PM GMT
Report

நாட்டில் எந்தவொரு பகுதியும் குறித்த ஒர் இனத்திற்கு பிரித்துக்கொடுக்கப்படவில்லை எனவும், திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையீடு செய்ய வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தேவையின்றி இந்த விவகாரத்தில் தலையீடு செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று(20.10.2023) கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

“திவுலபத்தான கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக அந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். 

கற்பிட்டியில் வீதி விபத்து: 5 வயது சிறுவன் உயிரிழப்பு

கற்பிட்டியில் வீதி விபத்து: 5 வயது சிறுவன் உயிரிழப்பு

விவசாய நடவடிக்கை

இது தொடர்பிலான கிராம உத்தியோகத்தர் பதிவுகளும் காணப்படுகிறது.

இந்த நாட்டில் ஒவ்வொரு இனத்திற்கு ஒவ்வொரு பகுதி என்று பிரித்துக் கொடுக்கப்படவில்லை.

திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்: சாணக்கியனை எச்சரித்த சரத் வீரசேகர | Sanakiyan Sarath Weerasekara Issue Tamil Land

அவ்வாறு செய்வது தவறான ஒரு விடயமாகும். இந்த கிராமத்தில் பௌத்த விகாரை தாக்கப்பட்டுள்ளது.

மக்கள் குடியிருந்த 19 வீடுகள் உடைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி வாழ் மக்களுக்கு அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அனுமதி பத்திரங்களை வழங்கி இருந்தார்.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இவ்வாறு அனுமதி பத்திரங்களை வழங்கி இருந்தார்.

முன்னிலை பட்டியலில் அரச ஊழியர்கள்: பதில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

முன்னிலை பட்டியலில் அரச ஊழியர்கள்: பதில் நிதியமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

தமிழ் - சிங்கள முரண்பாடு

இந்த பகுதியில் இருந்து இவ்வாறான ஒரு பின்னணியில் சிங்கள மக்களை வெளியேற்றுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இவ்வாறான செயற்பாடுகளினால் தமிழ் - சிங்கள மக்களுக்கிடையில் முரண்பாடு ஏற்படும்.

மேலும் இது மீண்டும் தீவிரவாதத்தை தூண்டக்கூடிய ஒரு செயலாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் அங்கம் என்பது நாம் அறிந்த விடயமாகும்.

யாரும் அதனை இல்லை என்று சொல்லவில்லை. கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதன் பின்னர் நாடாளுமன்றில் சத்திய பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னர் தமிழக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.

திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்: சாணக்கியனை எச்சரித்த சரத் வீரசேகர | Sanakiyan Sarath Weerasekara Issue Tamil Land

நாம் ராசமாணிக்கம் சாணக்கியனுக்கு ஒன்றை கூற விரும்புகின்றோம். தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்த வேண்டாம். அமைதியாக இருங்கள்.

பயங்கரவாதத்தினால் ஏற்பட்ட அழிவுகள் எமக்கு தெரியும். எனவே மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 

உக்கிரமடையும் போர்: சவப்பெட்டிகளில் வருவதா என கலங்கி நிற்கும் இலங்கையர்கள் - சபையில் பகிரங்க எச்சரிக்கை

உக்கிரமடையும் போர்: சவப்பெட்டிகளில் வருவதா என கலங்கி நிற்கும் இலங்கையர்கள் - சபையில் பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட வேண்டாம் என்றும் நாம் கூறுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்பதையும் நான் பதிவு செய்கின்றேன்.

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தாம் குரல் கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்

இஸ்ரேல் பக்கமா அல்லது பாலஸ்தீன பக்கமா என்பதை விட இந்த தாக்குதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள்.

திவுலபத்தான விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்: சாணக்கியனை எச்சரித்த சரத் வீரசேகர | Sanakiyan Sarath Weerasekara Issue Tamil Land

அரசியல் நோக்கங்களுக்காகவே பயங்கரவாதம் தலைதூக்குகின்றது.

இந்த பிரச்சினை எவ்வாறு உருவானது என்பதை நன்றாக ஆய்ந்து அறிந்து தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இதற்கு ஒரு தரப்பினால் இதற்கு தீர்வு வழங்கப்பட முடியாது.” என தெரிவித்துள்ளார்.

 

40 அடி பள்ளத்தில் வீழ்ந்து பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்

40 அடி பள்ளத்தில் வீழ்ந்து பேருந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US