நான் எதற்கும் பயந்தவன் அல்ல..சாமர சம்பத் எம்.பி!
''நான் சிறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வந்து பேசியவன்.நான் எதற்கும் பயந்தவன் அல்ல" என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடவடிக்கையின் போது இன்று வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்ற வரப்பிரதாசங்களுக்கு உட்பட்டு கதைப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
அப்போது கடையிலும் பாலத்திற்கு அடியில் இருந்தா கதைப்பது. நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்காக புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இருந்து CIDக்கு வாக்குமூலம் வழங்குவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள் சபாநாயகரே? எனக்கு அதற்கான சாட்சிகள் இருக்கின்றது.அப்படியென்றால் நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டு வெளியில் தான் கதைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

எதர்சையாக சீதா-மீனாவிற்கு தெரியவந்த அருண் பற்றிய உண்மை, முத்து தான் செய்தாரா?... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
