இலங்கையில் பொலித்தீனுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம்
இலங்கையில் பொலித்தீன் பயன்பாடு குறைந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியனிலிருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்றங்களை ஆய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.
மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம்
இந்த சந்திப்பின் போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், சுற்றாடல் தாக்கத்தை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்கு பதிலாக மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதிகாரிகள் விழிப்புடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
நடுவீதியில் திடீரென பேருந்தை மறித்து சாரதியை வாளால் தாக்க முயற்சித்த பெண் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு