மீண்டும் ரணிலுடன் கைகோர்க்கும் சஜித்..! நம்பிக்கை வெளியிட்ட ஐ.தே.க
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டவை ஏற்கெனவே ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும்(Sajith premadasa) ஐ.தே.கவுடன் இணையலாமென, ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் குழுவினர்
முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவால்(Maithripala Sirisena) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகார பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள், எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) அரசாங்கத்தை நடத்த ஆதரவளிப்பார்களெனவும், அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையும் சில குழுவினர், ஐ.தே.க.வுடன் இணைவதாகவும் இன்னும் சில குழுவினர் தமது அடையாளத்தை பாதுகாத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam
