இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தடவியல் கணக்காய்வை மேற்கொள்ள சஜித் வலியுறுத்தல்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு நாம் பரிந்துரை செய்கின்றோம் எனவும் தாம் மூன்று கடிதங்களையும் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த கடிதங்களை வாசிக்க முடியுமானவர்கள், அதனை வாசித்தால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, இலங்கை கிரிக்கெட்டிற்கு தடைவிதிக்குமாறு கோரப்பட்டுள்ளமை மிகவும் தெளிவாக புரியும்.
கிரிக்கெட் நிறுவனத்தையும் கிரிக்கெட் விளையாட்டையும் தடை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த நாட்டு பிரஜைகளுக்கு சர்வதேசத்திற்கு கடிதமொன்றை அனுப்பி இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்யுமாறு எவ்வாறு கூற முடியுமா?
இது தொடர்பாக தற்போதுள்ள விளையாட்டு அமைச்சர் விசாரணைகளை நடத்த வேண்டும் வலியுறுத்தியுள்ள சஜித் பிரேமதாஸ,. இது போலியான கடிதமா அல்லது போலியான கையெழுத்தா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
