நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Sri Lanka Parliament Gajendrakumar Ponnambalam
By Kirupa Dec 05, 2023 10:35 PM GMT
Report

மாவீரர் நினைவேந்தலை மேற்கொண்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை விரும்பவில்லை என்பதே தெளிவாகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(05.12.2023) இடம்பெற்ற அமர்வில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகள் : சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

ஐரோப்பாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகள் : சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவப்பு, மஞ்சள் கொடி

“மீண்டும் ஒருமுறை நினைவேந்தலை செய்வதை தடுக்கும் வகையிலேயே பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் மாவீரர் துயிலும் இல்லமொன்றுக்கு சென்றிருந்தனர்.

சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகளை கொண்டுசெல்வதற்காக வாகனமொன்றையும் அமைப்பாளர் வாடகைக்கு அமர்த்திருந்தார்.

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Sri Lankan Government Does Not Want Reconciliation

தமது கட்சியின் அமைப்பாளர் நினைவுகூரல் நிகழ்வில் கூட பங்கேற்கவில்லை. எனவும் மீளத் திரும்பிக்கொண்டிருக்கும் போது இடைநடுவே, சோதனைச் சாவடியில் அவர் நிறுத்தப்பட்டு, சோதனையிட்ட பின்னர் வாகனத்தை கைப்பற்றுவதற்கு பொலிஸார் தீர்மானித்தனர்.

சிவப்பு மஞ்சள் கொடியை வைத்திருந்ததன் காரணமாக சாரதியையும் பொலிஸார் கைதுசெய்தனர் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் என்பது தமிழ் தேசியத்திற்கான நிறங்களாகும் எனவும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற எனது கட்சியின் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது.

போர் குற்றவாளி

பெடரல் கட்சியின் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது என கூறியுள்ளது. போர்க் குற்றவாளியான பிள்ளையானின் கட்சிக் கொடியிலும் சிவப்பு மஞ்சள் உள்ளது.

எனினும் தமது கட்சியின் அமைப்பாளர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைதுசெய்யப்படவில்லை என்ற போதிலும் சாரதி கைதுசெய்யப்பட்டதால், பொலிஸாருடன் சென்றிருந்தனர்.

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Sri Lankan Government Does Not Want Reconciliation

நினைவேந்தல் நிகழ்வை செய்ய வேண்டும் என தமது அமைப்பாளரின் மகன் விரும்பினார் எனவும் அது குறித்து பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டார்.

வெளியே சென்று தீபம் ஏற்றுமாறு பொலிஸார் கூறியுள்ளதை அடுத்து வெளியே சென்று தீபம் ஏற்றிய போது அமைப்பாளரையும் அவரது மகனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டம்

குறித்த மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சர்வதேசத்திற்கு கூறிய விடயத்திற்கு எதிராக நினைவுகூரலை செய்யும் போது நீங்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றீர்கள்.

வெறுமனே நினைவுகூரலை செய்தால், அதனை விசாரணை செய்ய வேண்டுமாயின் வேறு சட்டங்களை பயன்படுத்தியிருக்க முடியும் என்ற போதிலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியன் மூலம் மக்களை அச்சுறுத்த முற்படுகின்றீர்கள்.

நல்லிணக்கத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்: கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Sri Lankan Government Does Not Want Reconciliation

அவர்களை அச்சமூட்டி, நினைவேந்தலை கைவிடுவதை உறுதி செய்ய முனைகின்றீர்கள் எனவும் உங்களின் நோக்கம் என்பது நல்லிணக்கம் அல்ல.

உங்களின் நோக்கம் என்பது, தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது அல்ல. அடுத்த தடவை மக்கள் தமது செயற்பாடுகளை சுயமாக கட்டுப்படுத்தி, நினைவேந்தலை செய்யாமல் தடுப்பதே உங்களின் நோக்கமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் தொடரும் இராணுவ மயமாக்கல் : அரசுக்கு எதிராக கடும் அழுத்தம் கொடுக்க பிரித்தானியா வலியுறுத்து

தமிழர் பகுதியில் தொடரும் இராணுவ மயமாக்கல் : அரசுக்கு எதிராக கடும் அழுத்தம் கொடுக்க பிரித்தானியா வலியுறுத்து

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு

கூட்டுப் பொறுப்பும் முன்கூட்டிய தயாரிப்புமற்ற புதுடில்லி சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US