மனம் மாறிய சஜித்! தனது கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி தெரிவிப்பு
என்பிபி அரசாங்கத்திற்கு தான் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டாளர் 840 பேரை நிரந்தர சேவையில் இணைத்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
முன்வைத்த கோரிக்கை
இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் சிறப்புப் பங்காற்றி வருகின்றனர்.
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.
8 ஆவது தரம் மற்றும் NVQ நிலை 3 சித்தியடைந்த 840 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தாலும், மேலும் 298 பேர் நிரந்தர நியமனம் இல்லாமல் உதவியற்ற நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கு 27,000 ரூபாய் கொடுப்பனவுடன் களத்தில் இறங்கி வேலை செய்வது கடினமாக உள்ளது. இவர்களையும் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam