தெஹ்ரானை மீண்டும் போர் தொடங்குவதைத் தவிர்க்குமாறு ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி வலியுறுத்தல்
பிராந்தியத்தில் மீண்டும் ஒரு ஆயுதமேந்திய மோதல் வெடிப்பதைத் தவிர்த்து, புதிய உலகளாவிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கி ஈரான் பயணிக்க வேண்டும் என ரஷ்ய பாதுகாப்பு பேரவையின் துணைச் செயலாளர் அலெக்சாண்டர் வெண்டிக்டோவ் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு கட்டமைப்பு
மாஸ்கோவில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் துணைச் செயலாளர் அலி பாகேரி கானி உடனான சந்திப்பின் போது வெண்டிக்டோவ் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாக ஈரானின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கும், மோதல்களைத் தடுப்பதற்கும் ஒரு புதிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவது தற்போதைய சூழலில் மிக முக்கியமானது என்றும் அவர் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.