பதுளை பகுதி மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
எல்ல-வெல்லவாய வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
ராவண எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் மலை உச்சியில் உள்ள பாறைகள் உறுதியற்ற தன்மையால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான சேதம்
இரண்டு நாட்களாக எரிந்து கொண்டிருந்த தீயை, தீவிர முயற்சிகளுக்குப் பிறகு இன்று காலை அணைத்துள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்துள்ளார்.
முப்படைகள், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்புடன் தீ அணைக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ராவணா எல்ல வனப்பகுதிக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
