இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் வெளியாகியுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில், ஒரு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரம் இன்ஸ்டிடியூசனல் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 63 சதவீதம் அதிகரித்துள்ளது.
முன்னோக்கி செல்லும் பொருளாதாரம்
இந்த தகவல், இந்தியாவின் பொருளாதாரம் முன்னோக்கி செல்வதை சுட்டிக்காட்டுகிறது.

தற்போது, இந்தியாவில் சுமார் 31,800 பேர், ஒரு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கின்றனர்.
இது, கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல, ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 58,200 ஆக அதிகரித்து, 49 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஒரு ஆண்டுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 10 இலட்சம் பேரை எட்டியுள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam