இன்றிரவு 11 மணி வரை ஐந்து மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 5 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (03) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மின்னலால் ஏற்படும் ஆபத்து
அதன்படி, சபரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே அப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
மேற்படி மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam