தலைகீழாக மாறும் ரஷ்ய - உக்ரைன் போர்: குடியேற்றங்களிலிருந்து வெளியேறும் ரஷ்ய மக்கள்
உக்ரைனிய படைகளின் ஆக்கிரமிப்பு காரணமாக குர்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராம மக்களை வெளியேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் ஆரம்பமாகி 6 வாரங்களுக்கு பின்னர் ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை 150,000 மக்களை அவர்களின் குடியேற்றங்களிலிருந்து ரஷ்யா வெளியேற்றியுள்ளது.
எதிர் தாக்குதல்
அத்துடன், உக்ரைனிய எல்லையை ஒட்டிய 15 கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள ரில்ஸ்கி (Rylsky) மற்றும் கோமுடோவ்ஸ்கி (Khomutovsky) ஆகிய பிராந்தியங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 கிலோமீட்டர் சுற்றளவில் அதிக எண்ணிக்கையிலான கிராமங்கள் உள்ளதோடு அதிக எண்ணிக்கையிலான மக்களும் அங்கு வசித்து வருகின்றன.
உக்ரைனிய படைகளின் திடீர் தாக்குதல் மற்றும் முன்னேற்றத்திற்கு மத்தியிலும் ரஷ்ய படைகள் தொடர்ந்து எதிர் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த வாரங்களில் உக்ரைனிய படைகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பல குடியேற்றங்களை ரஷ்ய படைகள் வெற்றிகரமாக மீண்டும் கைப்பற்றியுள்ளன.
இலங்கை சிறையில் மனிதாபிமானம் அற்ற ரீதியில் நடத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் : முன்வைக்கப்பட்ட விமர்சனம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri