ஐந்தாவது கோவிட் அலையை தடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள்
Srilanka
Covid-19
People
Covid vaccine
By Ajith
இலங்கை, ஐந்தாவது கோவிட் அலையை நோக்கி நகர்வதைத் தடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல யோசனைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி,
- நாட்டின் மக்கள்தொகையில் 70% க்கும் அதிகமானவர்களுக்கு முழுமையான தடுப்பூசி மற்றும் பாடசாலை மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படவேண்டும்.
- தடுப்பூசி தொடர்பான தேசிய ஆலோசனைக்குழுவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நவம்பர் தொடக்கத்திலிருந்து, இரண்டு அளவுகளையும் பெற்றவர்களுக்கு மூன்றாவது முன்னுரிமை பூஸ்டர் அளவு தடுப்பூசி செயல்முறை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
- சுகாதார வழிகாட்டுதல்களின்படி புதிய இயல்பான வாழ்க்கை முறைக்கு மக்கள் செல்ல வேண்டும்.
- தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும், அறிகுறியற்ற நோயாளர்களை அடையாளம் காண இலவசமாகக் கிடைக்கும் புதிய மற்றும் எளிய கோவிட் சோதனை முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
- சமூகத்தில் வளர்ந்து வரும் கோவிட் கொத்தணிகளை அடையாளம் காண, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, சீரற்ற சமூக மாதிரி சோதனைகளை அறிவியல் பூர்வமாகவும், ஒரே மாதிரியாகவும் நடத்த வேண்டும்.
- விஞ்ஞான மற்றும் சீரான முறையில் மரபணு சோதனையை நடத்துவதன் மூலம் சாத்தியமான புதிய விகாரங்களை அடையாளம் கண்டு, ஆரம்பத்திலிருந்தே சமூகத்தில் பரவுவதைத் தடுக்க உத்திகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 40 Reviews
Mr. Ramji Swamigal
4.7 175 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US