மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்குமாறு கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு - மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதால் அவ்வீதியால் பயணம் செய்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த பிரதான வீதியின் ஓரத்தில் மாட்டுக் கழிவுகள், குப்பை கூழங்கள் மற்றும் இறந்த கழிவுகளைக் கொட்டுவதால் அதன் பொலித்தீன் உரைகள் பயணம் செய்வோர் முகத்தில் வீசுவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பிரதான வீதியின் அருகில் மூதூர் மத்திய கல்லூரி மைதானம் காணப்படுகின்றது, அதில் காலை மாலை நேரங்களில் விளையாடுகின்ற இளைஞர்களுக்குச் சுவாசிப்பதில் பல இடையூறாகவும் காணப்படுகின்றது.
எனவே இவ்விடயத்தில் மூதூர் பிரதேச சபையினர் குறித்த இடத்தில் அறிவுறுத்தல் பலகைகளை இட்டுத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan