மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்குமாறு கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு - மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதால் அவ்வீதியால் பயணம் செய்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த பிரதான வீதியின் ஓரத்தில் மாட்டுக் கழிவுகள், குப்பை கூழங்கள் மற்றும் இறந்த கழிவுகளைக் கொட்டுவதால் அதன் பொலித்தீன் உரைகள் பயணம் செய்வோர் முகத்தில் வீசுவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பிரதான வீதியின் அருகில் மூதூர் மத்திய கல்லூரி மைதானம் காணப்படுகின்றது, அதில் காலை மாலை நேரங்களில் விளையாடுகின்ற இளைஞர்களுக்குச் சுவாசிப்பதில் பல இடையூறாகவும் காணப்படுகின்றது.
எனவே இவ்விடயத்தில் மூதூர் பிரதேச சபையினர் குறித்த இடத்தில் அறிவுறுத்தல் பலகைகளை இட்டுத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam