மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்குமாறு கோரிக்கை
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு - மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மைதானம் முன்னால் செல்லும் மட்டக்களப்பு மூதூர் பிரதான வீதியின் அருகில் கழிவுகளைக் கொட்டுவதால் அவ்வீதியால் பயணம் செய்வோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த பிரதான வீதியின் ஓரத்தில் மாட்டுக் கழிவுகள், குப்பை கூழங்கள் மற்றும் இறந்த கழிவுகளைக் கொட்டுவதால் அதன் பொலித்தீன் உரைகள் பயணம் செய்வோர் முகத்தில் வீசுவதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு பிரதான வீதியின் அருகில் மூதூர் மத்திய கல்லூரி மைதானம் காணப்படுகின்றது, அதில் காலை மாலை நேரங்களில் விளையாடுகின்ற இளைஞர்களுக்குச் சுவாசிப்பதில் பல இடையூறாகவும் காணப்படுகின்றது.
எனவே இவ்விடயத்தில் மூதூர் பிரதேச சபையினர் குறித்த இடத்தில் அறிவுறுத்தல் பலகைகளை இட்டுத் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam