மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் உடனடியாக நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நகர சபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (06) மதியம் மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், "மன்னார் நகர சபையின் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்த செயல்பாடுகள் இரு மாதங்களில் ஒரு வருடத்தை கடக்கவுள்ளது.
இது வரைக்கும் நாங்கள் நகரசபையால் பிரயோஜனமாக மக்களுக்கு என்ன செய்தோம் என்பதில் ஒரு கேள்விக்குறிதான். இருந்தாலும் எங்களால் முடிந்த வரை எங்களுடைய வட்டாரங்களுக்கு நாங்கள் செய்திருக்கிறோம்.
வெற்றிட காணிகள்
அதேநேரம் இன்றைய ஊடக சந்திப்பின் முக்கிய காரணம் என்னவென்றால், நாங்கள் இதில் ஏழாம் மாதம் 9ஆம் திகதி 2025ஆம் ஆண்டு ஒரு பிரேரணை கொடுத்திருக்கிறோம்.

மீன் சந்தை, மரக்கறி சந்தை புனரமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மற்றும் பராமரிப்பின்றி உள்ள வெற்றிட காணிகளை துப்புரவு செய்யச் சொல்லி ஒரு பிரேரணை கொடுத்திருக்கிறோம்.
இதே மாதிரி ஐந்துக்கும் மேற்பட்ட பிரேரணைகள் கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் எந்த ஒரு பிரேரணையும் சபைக்கு வந்ததும் இல்லை.கருத்தில் கொள்ளப் பட்டதும் இல்லை.
நாங்கள் கொடுக்கும் பிரேரணைகள் எல்லாம் குப்பையில் தான் போய்க்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இப்போது சபை அமர்வுகளில் கலந்து கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.
நாங்கள் என்ன பேசுகிறோம் என்று மக்களுக்கும் வெளியே தெரிவதில்லை. அதனால் இந்த ஊடக சந்திப்பை வைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam