உர மானியத்தை விரைவாக வைப்பிலிடுங்கள்: அரசாங்கத்திடம் எதிரணி எம்.பி. கோரிக்கை
விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள உர மானியப் பணத்தை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன(Rohini Kumari Wijeratne-Kaviratne) அரசாங்கத்திடம் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும்போகத்துக்கு தேவையான உரத்தைப் பெற 25 000 உர மானியம் அரசால் வழங்கப்படுகிறது.
உர மானியம்
இந்த உர மானியம் குறிப்பிட்ட திகதியில் வழங்கப்படும் என அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பல சந்தர்ப்பங்களில் கூறியும் இதுவரை எந்த ஒரு நபரின் வங்கிக் கணக்கிலும் பணம் வைப்பிலிடப்படவில்லை.
அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ளன.
வெற்றிகரமான அறுவடையைப் பெற, நெல் பயிரிடப்பட்டு 14 நாட்களில் உரமிட வேண்டும். மானியம் இல்லாததால் உரங்களை வாங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
