ஹல்துமுல்லவில் நீராடச் சென்று காணாமல் போன தந்தை, மகனின் சடலங்கள் மீட்பு
ஹல்துமுல்ல - களுபான வெலிஓயா ஆற்றில் நீராடச் சென்றிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன தந்தை மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
18 மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட தேடுதலின் பின்னர் இருவரின் சடலங்களையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
புத்தாண்டு விடுமுறையை கழிப்பதற்காக நேற்றைய தினம் பதுளைக்கு சென்ற போது ஆற்றில் நீராடிய குடும்பம் ஒன்றின் தந்தையும் மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தனர்.
கடுமையான மழை காரணமாக திடீரென நீரின் மட்டம் அதிகரித்த காரணத்தினால் அவர்கள் இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையிலேயே நீண்ட தேடுதலின் பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.