"யானையும் ஏரியில் குளிக்க வேண்டி வரும்": ரணிலுக்கு துறவியின் எச்சரிக்கை -செய்திகளின் தொகுப்பு (Video)
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆசி வழங்கிய பௌத்த மதத் தலைவர்கள் இலங்கையின் தேசிய நெருக்கடி குறித்து நுட்பமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண தேவையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தவறினால் புதிய பிரதமரும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பிக்குகள் எச்சரித்துள்ளனர்.
"சமீபத்திய சம்பவங்களைப் போலவே, யானையும் பெய்ரா ஏரியில் குளிக்க வேண்டியிருக்கும்," என்று அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினர், தேசத்தின் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு செவிசாய்க்குமாறு அவரை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,