இந்திய குடியரசு தினத்தில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பு!
இந்தியாவின் குடியரசு தின அணிவகுப்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது என்று கூறி தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு இடமளிக்கப்படவில்லை.
மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரச அதிகாரிகள் இதனை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை தென்மாநிலங்களில் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில அலங்கார ஊர்திகளும் குடியரசுத்தின நிகழ்வில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தாங்கிய மேற்கு வங்க ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்பாட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்திய குடியரசுத்தினம் ஜனவரி 26ஆம் திகதியன்று கொண்டாடப்படுகிறது.
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri