ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற தயார்: நரேந்திர மோடி
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காக பணியாற்ற தயார்
மக்களின் பரஸ்பர நலனுக்காக ஜனாதிபதியுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக இந்திய பிரதமர் மீண்டும் வலியுறுத்துவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சீன ஜனாதிபதி ஸீ பின்ஜிங், முன்னதாக வாழ்த்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரணிலுக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுப்பியுள்ள விசேட கடிதம் |