18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே... விராட் கோலியின் இணைய பதிவு
18-வது ஐ.பி.எல் தொடரின் கோப்பையை வென்ற பின்னர் விராட் கோலி பதிவிட்ட சமூகவலைத்தள பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
18-வது ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நேற்று(3) நடைபெற்றது.
18 வருட கனவு
இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை பெற்றது.
இதனைத் தொடர்ந்து 191 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி இறுதிப் போட்டியை வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இணையத்தில் பரவும் பதிவு
இந்நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்ற புகைப்படங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் செம்பியன் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற உடை அணிந்து, கோப்பையை பிடித்தபடி விராட் கோலி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த இன்ஸ்டா பதிவில் "ஐபிஎல் கோப்பையே! உன்னை கையில் ஏந்திக் கொண்டாட, என்னை 18 ஆண்டுகள் காத்திருக்க வைத்துவிட்டாயே..! இந்த சீசனை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். பல வருட மன வேதனைகள், ஏமாற்றங்களுக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது.
இது கடினமான நேரங்களில் என்னோடு பயணித்த ஆர்.சி.பி ரசிகர்களுக்கானது" என்று பதிவிட்டுள்ளார்.




