ரணிலின் குடியுரிமையை ரத்து செய்ய முடியுமா..!
படலந்த விசாரணைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் சட்டத்தரணி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
படலந்த விசாரணைக் குழு 1948 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க விசாரணைக் குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதால், இது எந்தவொரு நபரின் சிவில் அல்லது குடியுரிமை ரத்து செய்ய அதிகாரமுடையதல்ல என பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.
சட்டத்தின்படி, ஒரு நபரின் சிவில் அல்லது குடியுரிமை ரத்து செய்ய முடியும் என்பது 1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் விசாரணைக் குழுக்களுக்கு மட்டுமே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரை
1978 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க சிறப்பு ஜனாதிபதி விசாரணைக் குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடத்தி, தொடர்புடைய நபர்களின் சிவில் அல்லது குடியுரிமை நீக்க முடியும் எனவும் அவர் விளக்கியுள்ளர்ர்.

எனினும், படலந்த விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கை உரிமை, சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக சில சிறப்பான மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செய்யக்கூடியதாக இருக்கலாம் என் தெரிவித்துள்ளார்.
போதுமான சான்றுகள் இருந்தால், குற்றவியல் வழக்குகளை தொடர சட்டமா அதிபருக்கு அதிகாரம் உள்ளதையும் மஹாநாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam