ரணிலின் லண்டன் பயணம்! விசாரணையில் வெளிவந்த முக்கிய தகவல்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய இராச்சியத்திற்கு பயணித்த நிலையில் அவருடன் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அவரது பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இருவர், விக்ரமசிங்கவின் தனி மருத்துவர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் நான்கு உறுப்பினர்கள் உட்பட மொத்தமாக 10 பேர் பயணம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செப்டம்பர் 2023 இல் ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட பயணம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து,கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நாள் லண்டன் பயணம்
அதனை தொடர்ந்து நடைபெற்றுவரும் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2023 செப்டம்பர் 22,23 ஆகிய திகதிகளில் ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு நாள் லண்டன் பயணம், அரசு நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்ட போதிலும், ஆரம்பத்தில் ஒரு தனிப்பட்ட வருகையாகப் பதிவு செய்யப்பட்டதாக புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக பிரதி பொலிஸ் மா ஜெனரல் கலிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அவரது பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் இருவர், விக்ரமசிங்கவின் தனி மருத்துவர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் நான்கு உறுப்பினர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தை எளிதாக்குவதற்காக ஜனாதிபதியின் அலுவலகமும் வெளியுறவு அமைச்சகமும் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துடன் கடிதப் போக்குவரத்து செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தரப்பு
கியூபா மற்றும் அமெரிக்காவில் உத்தியோகபூர்வ ஈடுபாடுகள் குறித்த பதிவுகள் இருந்தாலும், இங்கிலாந்து நிகழ்ச்சி நிரலில் எந்தவொரு உத்தியோகபூர்வ ஈடுபாடுகளும் பட்டியலிடப்படவில்லை.

பொலிஸாரின் கூற்றுப்படி, இங்கிலாந்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம், முதல் பெண்மணி மற்றும் தனிச் செயலாளர் விக்ரமசிங்கவின் பயணம், தங்குமிடம், வாகன வாடகை மற்றும் பிற செலவுகளுக்காக £14,445 (சுமார் ரூ. 16,207,573) செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அதிகாரப்பூர்வ அரசு வேலையில் இருந்தபோது மேற்கொண்ட பயணம் என்பதால், இந்த தொகையில் விமானக் கட்டணம் சேர்க்கப்படவில்லை.
ஜனாதிபதி அலுவலக பதிவுகளின்படி, மருத்துவர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூடுதலாக 3.2 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
உள்ளக விசாரணையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் பொலிஸ் மா அதிபரிடம் கோரியதை அடுத்து, மே 23, 2025 அன்று விசாரணை தொடங்கப்பட்டது என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan