ரணிலின் கைதினையடுத்து போராட்டம்! தடுத்து நிறுத்திய பொலிஸார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதை நிட்டம்புவ தேர்தல் தொகுதி அத்தனகல்லயில் அடுத்து கறுப்பு கொடி நகரத்தில் கட்டப்பட்டதை பொலிஸார் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.
நேற்று இரவு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இணைந்து நிட்டம்புவ நரத்தின் மத்தியில் கறுப்பு கொடிகளை கட்டியுள்ளனர்.
கறுப்பு கொடி போராட்டம்
அந்த சந்தர்ப்பத்தில் வந்த நிட்டம்புவ பொலிஸார் அவற்றை கழட்டுமாறு அச்சுறுத்தியதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, முதலில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தேசிய வைத்தியசாலையில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



