ரணில் - சஜித் அடுத்த வாரம் நேரடிச் சந்திப்பு
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றிணைந்து செயலாற்றுவது தொடர்பில் குறித்த கட்சிகளின் தலைமைகளான சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் நேரடிச் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அடுத்தவாரம் அதற்கான சந்திப்பு கொழும்பில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கடந்த நாட்களில் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகள் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.

இணக்கப்பாடுகள்
குறித்த சந்திப்புகளில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் மற்றும் அதன் ஊடாக இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் இரு கட்சிகளினதும் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri