இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!! ரணிலின் அடுத்த கட்ட நடவடிக்கை
இலங்கையில் இன்றைய தினம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்களும் செய்திகளாக தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன.
அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன்போது 30 அமைச்சரவை அமைச்சர்களும் 30 ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க >>> ரணிலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை - சிறுபான்மையினருக்கு பல அமைச்சு பதவிகள்
2. இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> இலங்கை வருவதனை தவிர்க்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
3. இலங்கையில் வரிசை இல்லாத ஒரே எரிபொருள் நிலையம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வித வாடிக்கையாளரும் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை குளியாபிட்டிய தண்டகமுவ ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்னெடுத்துள்ளது.
அந்த நடைமுறை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க >>> இலங்கையில் வரிசை இல்லாத ஒரேயொரு எரிபொருள் நிலையம்
4. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> மொட்டு கட்சி எம்.பிக்கள் அழுத்தம்: பறிபோகின்றது பீரிஸின் பதவி
5. கிளர்ச்சிகள் உருவானால், அவற்றை ஒடுக்குமுறை மூலம் மாத்திரமே அடக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டுக்காக மேற்கொள்ளப்படும் சிறந்த பணிகளுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கூடியளவில் ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க >>> கிளர்ச்சிகளை ஒடுக்குமுறை மூலமே அடக்க முடியும்: நாமல் ராஜபக்ச
6. இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் மேல் மாகாணம் உட்பட பல பிரதேசங்களில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 24 ஆக அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் விசேட புலனாய்வுப் பிரிவினால் விசாரணை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க >>> இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் - வெளிநாடுகளில் இயங்கும் கும்பல்
7. ஹிருணிகாவிற்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 10 பேரை சந்தேக நபர்களாக பெயரிடுமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும் படிக்க >>> ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
8. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்வதற்காக இலங்கையிலும் இந்தியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படும் ஆயுத மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தாம் நேற்று தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டதாக இந்திய தேசிய புலனாய்வுத் துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>> போதைப்பொருள் கடத்தல்: இந்திய தேசிய புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கை
9. முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்கி விட்டு, அரசாங்கத்தை கவிழ்க்க அரச புலனாய்வு சேவை உள்ளிட்ட புலனாய்வு சேவைகள் நடவடிக்கை எடுத்தனவோ என்ற சந்தேகம் இருப்பதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
பொது பாதுகாப்பு சம்பந்தமாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் அமைச்சர் டிரான் அலஸ் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
மேலும் படிக்க >>> மகிந்தவும் கோட்டாபயவும் பதவி விலகியமைக்கு புலனாய்வு சேவைகள் காரணமா...
10. சீனாவின் உளவுத்துறை கப்பல் இலங்கையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் நிலைகொள்ள இருப்பது இந்திய பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>> சீன கப்பல் விவகாரம்! இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: சீமான் எச்சரிக்கை