ரணிலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை - சிறுபான்மையினருக்கு பல அமைச்சு பதவிகள்

Basil Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan political crisis C. V. Vigneswaran
By Vethu Aug 06, 2022 04:08 AM GMT
Report

சர்வகட்சி அரசாங்கத்தின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன்போது 30 அமைச்சரவை அமைச்சர்களும் 30 ராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை

ரணிலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை - சிறுபான்மையினருக்கு பல அமைச்சு பதவிகள் | Ranil S Next Political Action

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னி ஆராச்சி, எஸ்.எம். சந்திரசேன, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை பொதுஜன பெரமுன பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர். 

இதேவேளை, வடக்கு கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்காக அந்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சு பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் எம்.பிகளுக்கு அமைச்சு பதவி

ரணிலின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை - சிறுபான்மையினருக்கு பல அமைச்சு பதவிகள் | Ranil S Next Political Action

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பி.எம். ஜீவன் தொண்டமான், தேசிய காங்கிரஸ் தலைவர் பி.எம். ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US