ரணில் இனப்பிரச்சினையை கூறி ஆதரவைப் பெற முயற்சிக்க கூடும், கூட்டமைப்பு அவதானமாக செயற்பட வேண்டும் : சுரேஸ் பிரேமசந்திரன்
பிரதமராக பதவியேற்றுள்ள ரணிலின் முதல் வேலை மக்களை மூன்று வேளையும் சாப்பிட வைப்பது, எரிபொருளை பெற்றுக்கொடுப்பதும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்றைய தினம்(13) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ரணிலிடம் இனப்பிரச்சினை தொடர்பான எந்த எண்ணமும் இல்லை ஆதரவைப் பெறுவதற்காக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏதாவது சொல்லலாம் கூட்டமைப்பு கவனம்.
நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக கூட்டமைப்பிடம் இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களை கூறி ஆதரவைப் பெற முயற்சிக்க கூடும் கூட்டமைப்பு, அவதானமாக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் கூட்டமைப்பின் ஆதரவு இனப்பிரச்சினை சார்ந்த விடயத்தை முன்வைக்க கூடும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக தெரிவித்து.சம்மந்தன், சுமந்திரன் ஆதரவு தெரிவித்த போதும் எதுவுமே நடைபெறவில்லை சூடு கண்ட பூனைபோல் கூட்டமைப்பு செயற்பட வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.