அநுர ஆதரவாளர்களுக்கு எதிராக ரணிலின் ஆதரவாளர்கள்..!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது ரணில் ஆதரவாளர்களால் இடம்பெற்ற போராட்டத்தில் ரணில் விக்ரமசிங்க ஆதரவாளர்கள் அநுர ஆதரவாளர்களை கேலி செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை இன்று(26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடத்தப்படும் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டது.
ரணில் ஆதரவாளர்கள் “AKD GO கம” என்ற பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், “COMEBACK RANIL” என்ற வாசகமும் பலரது கவனத்தை பெற்றது.
இந்நிலையில், ரணில் ஆதரவாளர்கள் போராட்டத்தின் போது அநுர ஆதரவாளர்களை கேலி செய்தும் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளமை காணொளிகளில் பதிவாகியுள்ளது.



