“கோட்டாபய” தொடர்பில் “ரணில்” விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கையின் அரசியலமைப்பின் சரத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனவரி 18 ஆம் திகதி சபையில் உரையாற்றியதைத் தொடர்ந்து, ஒத்திவைப்பு விவாதம் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"இது 1978 அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து இலங்கையில் பின்பற்றும் நடைமுறையாகும்," என்று அவர் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 70 வது சரத்தின் மூலம், தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில், ஜனாதிபதி ஒரு சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் 2021, டிசம்பர் 12 அன்று நள்ளிரவில் இருந்து நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார்.
இதன்படி நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் 18ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது.
இந்தநிலையில், அரசியல் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இந்த ஒத்திவைப்பு விவாதத்தை ஜனவரி 19, 20 மற்றும் தேவைப்பட்டால் 21 ஆம் திகதிக்கு ஒதுக்குமாறு சபாநாயகரிடம், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
