ராஜீவ் காந்தி கொலை வழக்கை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்: யோதிலிங்கம் கோரிக்கை
ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதிபதிகள், முன்னிலையில், அல்லது சர்வதேச கண்காணிப்பில் மீள் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாந்தனுடைய மரணம்
சாந்தனின் மரணச் சடங்கு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. இதனை சிறப்பாக செய்வதற்கு மூன்று தரப்புகள் சிறப்பாக பங்களிப்பு செய்திருக்கின்றன.
ஒன்று மரண நிகழ்வைப் பொறுப்பெடுத்த குரலற்றவர்களின் குரல் அமைப்பு இரண்டாவது குடும்பத்தவர்கள், மூன்றாவது.சாந்தன் அவர்களுடைய சட்டத்தரணி ஆகிய புகழேந்தி.
உண்மையில் இந்த மூன்று தரப்பும் தான் சாந்தன் அவர்களுடைய மரண சடஙகுகள் சிறப்பாக நடப்பதற்க்கு பெறுவதற்கு பிரதானமாக பங்களித்தவர்கள் என்று கூறலாம்.
இந்நிலையில், சாந்தனுடைய மரணம் ஒரு இயற்கை மரணம் என்று கூறி விட முடியாது. அது ஒரு செயற்கையான மரணம்.
அது தவிர்த்து இருக்க வேண்டிய மரணம். அதுவும் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர்.
இதன்படி சிறையில் படாத துன்பங்கள் இல்லை. சிறையில் சுகதேகியாக இருந்தவர் பின்னர் சிறப்பு முகாமில் மரணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
