நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச

Colombo Gotabaya Rajapaksa Maldives Sri Lanka Anti-Govt Protest
By Murali Jul 13, 2022 01:30 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AFP செய்தி முகவரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.


கொழும்பில் இருந்து அதிகாலையில் கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் செல்லும் இராணுவ விமானம் புறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கு மத்தியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், இந்த விமானம் மாலைத்தீவில் உள்ள மாலே நோக்கிச் சென்றதாகவும், குறித்த விமானம் மாலைத்தீவு நேரப்படி அதிகாலை 2.50 மணிக்கு தரையிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியாக இருக்கும் போது வழக்கு விசாரணையில் இருந்து விலக்கு பெறும் சர்வாதிகாரத் தலைவர், புதிய நிர்வாகத்தால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக பதவி விலகுவதற்கு முன் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல விரும்பியதாக நம்பப்படுகிறது.

நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச | Rajapaksa Attempts To Escape Sri Lanka Again

இதனிடையே, ஜனாதிபதியின் பதவி விலகல் நாட்டில் ஒரு அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிதி அழிவில் இருந்து நாட்டை மீட்டு எடுக்க ஒரு செயல்படும் அரசாங்கம் தேவையாக உள்ளது.

இந்நிலையில், அரசியல்வாதிகள் புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனினும், அவர்கள் இன்னும் உடன்படுவதற்கான அறிகுறிகள் வெளியாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் கொண்டு வருவரும் இடைக்கால அரசாங்கத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதும் தெரியவில்லை என குறிப்பிடப்படுகின்றது.  அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி பதவி விலகினால் அவருக்கு பதிலாக பிரதமர் தான் செயல்பட வேண்டும்.

எனினும், தற்போதைய பிரதமர் நாடாளுமன்றில் செல்வாக்கற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாடாளுமன்றத்தின் சபாநாயகரே தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான வாய்ப்பு அதிகம் என அரசியலமைப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனினும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ராஜபக்சக்களின் நெருங்கிய ஒருவராக இருப்பதன் காரணமாக அவரது அதிகாரத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியவில்லை என கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்கள் 2024ம் ஆண்டின் பிற்பகுதி வரை ஜனாதிபதியான செயற்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ ஆய்வாளர் அரூஸ் கூறிய எதிர்வு கூறல் நிஜமானது

நேற்று திங்கட்கிழமை (12.07.2022) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய  இராணுவ ஆய்வாளர் பிரித்தானியாவின் வேல்ஸ் இல் இருந்து அரூஸ்  அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைத்தீவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US