மன்னாரில் மழைநீர் சேமிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
மன்னார் மாவட்டத்தில் மழை நீரை சேமிக்கும் நடை முறை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் தடை இன்றி விவசாய செய்கையை முன்னெடுக்க முடியும் என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் பாரிய குளங்களை கட்டினால் மன்னார் மாவட்ட விவசாயிகள் இரண்டு போகத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொள்ள முடியும்
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வருடா வருடம் ஒவ்வொரு பருவ காலங்களிலும் மழை பெய்வது வழமை. மழை பெய்யும் போது பிரதேசங்களில் வெள்ள நீர் பெருக்கெடுக்கும்.
மழை நீர் சேமிப்பு
மழை நீர் கடலுடன் கலக்கும். 8 ஆம் மாதத்திற்கு பின்னர் பெய்யும் மழையின் நீரை நாங்கள் எந்த வகையிலும் சேமிப்பது இல்லை.
அனைத்து மழை நீரும் கடலுடன் கலக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் சுமார் 6 இற்கும் மேற்பட்ட ஆறுகள் காணப்படுகின்றது.
அனைத்தும் அதிகமான நீரை கொண்டு செல்லக் கூடிய பெறுமதியான ஆறுகளாக காணப்படுகிறது. இந்த ஆறுகள் ஊடாக வருகின்ற நீர் கடலுடன் கலக்கின்றது.
ஆனால் 6 ஆம் மாதத்தின் பின்னர் நெற்பயிர்ச் செய்கை,தோட்டம் மற்றும் கால்நடைகளுக்கு நீர் இல்லை என அலை மோதி திரிவோம்.
ஆறுகளை அண்மித்த பகுதி
எனவே மன்னார் மாவட்டத்தில் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் பாரிய குளங்களை கட்டினால் மன்னார் மாவட்ட விவசாயிகள் இரண்டு போகத்திற்கு தேவையான நீரை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த முடியும்.
அருகில் உள்ள யாழ். மாவட்டத்திற்கும் தேவையான நீரை வழங்க முடியும். பாலியாற்று தண்ணீர் கடலுடன் கலப்பதை அவதானிக்கிறோம்.
இவ்வளவு சுத்தமான நீர் ஆறுகள் ஊடக சென்று கடலுடன் கலக்கின்றது. விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் நீருக்காக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
