அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்கள் குறைப்பு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நிதி நிலைமை
மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் நிதி நிலைமைகள் சவால் மிக்க நிலையில் காணப்படுகின்றன.
எனினும் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளங்கள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை.
அரச ஊழியர்களின் சம்பளங்கள் அரைவாசியாக குறைக்கப்பட உள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது.

சம்பள குறைப்பு
என்றபோதும் அரச ஊழியர்களின் சம்பளங்களோ அல்லது அரசாங்கத்தின் நலன்புரித் திட்டங்களோ குறைக்கப்படாது.
நிதிச் சவால்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து மக்களுக்கு சேவையாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் News Lankasri