தலைவர்களைக் கொல்லக் கொல்ல வீறுகொண்டு எழும் ஈரான்! கடுங்குழப்பத்தில் ட்ரம்ப்!
மத்திய கிழக்கில் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,ஈரான் இஸ்ரேலிடமும் அமெரிக்காவிடமும் ஒருபோதும் சரணடையாது என பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஈடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரான் ஒரு பேச்சுவார்த்தைக்கு வரலாம்.ஆனால், இஸ்ரேலுடையதோ, அமெரிக்காவினுடையதோ அழுத்தத்தினால் வரப்போவதில்லை.
67 வயதுடையவர் போகின்ற பொழுது அடுத்து இளம் தலைமுறையினர் ஆட்சிக்கு வரப் போகின்றனர்.
இளம் தலைமுறையினரை ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த யுத்தம் மேலும் கடுமையாக்கப்படும்.
ஈரானிடம் அணுஆயுதம் இல்லை எனத் தெரிந்த படியால் தான் போர் தீவிரமடைகின்றது.இதேவேளை, வடகொரியா தனது அணுஆயுத பலத்தை வெளிக்காட்டியதால் அமெரிக்கா அதனிடமிருந்து விலகியுள்ளது.
அத்தோடு, மத்திய கிழக்கில் அமைதி மற்றும் சமாதானம் வரக் கூடாது என்பதில் அமெரிக்காவும், இஸ்ரேலும் கண்ணும் கருத்துமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri