கிளிநொச்சி பகுதியில் கழிவகற்றல் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகும் பொதுமக்கள்
கிளிநொச்சி - பரந்தன் நகர் பகுதியில் கழிவகற்றல் முறையாக நடைபெறாமை மற்றும் பொது மலசல கூடத்திற்கான தண்ணீர் வசதியின்மையால், அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.
கிளிநொச்சி நகரத்தின் உபநகரங்களில் ஒன்றாகவும், நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் வரும் இடமாகவும் காணப்படும் பரந்தன் நகரத்தின் பொது இடங்களிலும், பேருந்து நிலையத்திலும், உரிய முறையில் கழிவகற்றல்கள் மேற்கொள்ளப்படாமையால் கழிவுகள் தேங்கி காணப்படுகின்றன.
அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் பொதுமக்கள்
இதனால் சில கழிவு தொட்டிகளில் தூர நாற்றம் வீசியும், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், பல்வேறு இடங்களில் வருகை தரும் ஆயிரக்கணக்கான பயணிகள், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் பயன்படுத்தும் பொது மலசல கூடம், கடந்த நான்கு மாதங்களாக கட்டுமான பொருட்கள் காரணமாக செல்ல முடியாமல் இருக்கின்றது. அதற்கு மேலாக, தண்ணீர் வசதியும் இன்றும் இல்லை.
இதனால் மலசல கூடத்தை பயன்படுத்த முடியாமல் பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, முல்லைத்தீவு, பூநகரி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளையும் இணைக்கும் பிரதான போக்குவரத்துக் குழிவு மையமாக உள்ள பரந்தன் நகரத்தில், உரிய மலசல கூட வசதிகளின்மை மற்றும் கழிவகற்றல் முறையின்மையால், நகரத்திற்கு வருவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மீட்கப்பட்ட விமானி அமெரிக்காவிற்கு அனுப்பிய 3 வார்த்தைச் செய்தி! மலைகளில் 48 மணி நேர போராட்டம் - துல்லியமாக செயற்பட்ட CIA